மத்திய கிழக்கு

பசியுடன் போராடும் காசா மக்கள் – 5 நாட்களாக நிவாரணப் பொருட்கள் விநியோகித்த அமீரகம்

காசாவில் தொடர்ந்து 5வது நாளாக, விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை பாராசூட் உதவியுடன் ஐக்கிய அரபு அமீரகம் வீசியது.

இந்த முயற்சியின் கீழ் இதுவரை சுமார் 4,000 டன் உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

விமான நிவாரணத்துடன் கூடுதலாக, தரைமார்க்கமாகவும் உதவிகள் அனுப்பப்பட்டுள்ளன. 41 லொரிகள் உணவுப் பொருள்களுடன் மற்றும் 12 லாரிகள் மருந்துப் பொருள்களுடன் காசா பகுதியில் நுழைந்துள்ளன.

இஸ்ரேலின் தடைகளை எதிர்கொண்டு வந்த நிலையில், சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையடுத்து, இஸ்ரேல், நிவாரணப் பொருள்கள் காசாவுக்குள் அனுப்ப அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகம் தலைமையிலான நிவாரண நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன.

போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட காசா மக்கள், தொடர்ந்து உணவு மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு உள்நோக்கியுள்ள நிலையில், இந்த உதவி முயற்சி வாழ்வாதார நெருக்கடியில் சிக்கியோருக்கு ஓர் உதவி பயணமாக பார்க்கப்படுகிறது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.