உலகம்

காசா அமைதி திட்டம் – ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் : எச்சரிக்கும் ட்ரம்ப்!

காசாவில் அமைதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

புளோரிடாவில் நேற்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர் மேற்படி அறிவித்துள்ளார்.

இதன்போது அமெரிக்கா தலைமையில் முன்வைக்கப்பட்ட 20 அம்ச அமைதி திட்டம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

நெதன்யாகுவுடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ​​காசாவில் அதன் இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திய போதிலும், இஸ்ரேல் “திட்டத்தை 100% நிறைவேற்றியுள்ளது” என்று கூறியுள்ளார்.

ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணை அல்லது அணு ஆயுதத் திட்டங்களை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கினால், அதன் மீது மற்றொரு பெரிய தாக்குதலை தனது நாடு முன்னெடுக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையென்றால் நரகத்தை பார்க்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!