எரிவாயு விலை உயர்வைத் தொடர்ந்து உணவின் விலையும் அதிகரிப்பு!

எரிவாயு விலை உயர்வுடன் பல வகையான உணவு வகைகளின் விலைகளை உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்தார்.
இதனடிப்படையில், தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், கொத்து ரொட்டி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
(Visited 13 times, 1 visits today)