இலங்கை செய்தி

யாழில் போதையேற்றி கூட்டு பலாத்காரம் – சகோதரன் ஒருவரி கொடூரச் செயல்

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் சகோதரன் உள்ளிட்ட கும்பல் ஒன்றினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு சம்பவம் தொடர்பிலான பொலிஸ் விசாரணையில், சகோதரன் மாத்திரமே சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், தாய், தந்தையை இழந்த பின்னர் சகோதரியுடன் வடமராட்சி பகுதியில் உள்ள பெண்கள் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் சகோதரி கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளார்.

அதனை அடுத்து சகோதரன் காப்பகத்தில் இருந்த தனது சகோதரியை வீட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் அழைத்து வந்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் வரையில் சகோதரிக்கு போதை ஊசியினை செலுத்தியும் மதுபானம் உள்ளிட்டவற்றை கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார். ஏப்ரல் மாதம் பெண்ணின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து மீண்டும் காப்பகத்தில் அவரை சேர்த்துள்ளார்.

பின்னர் இந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டடு வந்தமையையும் , சித்திரவதைகளுக்கு உள்ளானமையும் கண்டறியப்பட்டது.

அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தில், தன்னை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்றே வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் தொடர் விசாரணைகளின் போது , சம்பவத்துடன் பெண்ணின் சகோதரனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்தவேளை, தன்னை சகோதரனே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததாகவும் , வேறு நபர்கள் எவரும் சம்பந்தப்படவில்லை எனவும் , சகோதரன் மீதான பயத்திலேயே முன்னர் அவ்வாறு வாக்குமூலம் அளித்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content