கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம் – சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல்!
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை நவம்பர் 7 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதி வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் அந்த தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
பூசா சிறையில் உள்ள துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும், மற்ற சந்தேக நபர்களையும் ஜூம் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
(Visited 3 times, 3 visits today)





