செய்தி விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை வெளியீட்டில் மேலும் தாமதம்!

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான நிச்சயமற்ற தன்மை தொடரும் நிலையில், போட்டிக்கான அட்டவணையை வெளியிடுவது தாமதமாகலாம் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாக (ஐசிசி) வட்டாரங்கள் புதன்கிழமை (20) ஜியோ செய்திச் சேவையிடம் கூறியுள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) போட்டிக்கான ஹைப்ரிட் முறைமைக்கு எதிரான அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் நிகழ்வின் அட்டவணை அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் ஐசிசி ஆதாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி – அடுத்த ஆண்டு பெப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தானால் நடத்தப்படும்.

முதன்மையான எட்டு அணிகள் பங்கேற்கும் போட்டிக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ளது.

எனினும், இடங்கள் மற்றும் அட்டவணை குறித்து இன்னும் தெளிவு இல்லை.

ஐசிசி நிகழ்வு பாகிஸ்தானின் லாகூர், ராவல்பிண்டி மற்றும் கராச்சி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

எனினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), இந்திய கிரிக்கெட் அணி 2025 சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தான் பயணம் செய்யாது என்று ஐசிசிக்கு உறுதி செய்ததை அடுத்து போட்டியின் தலைவிதி கேள்விக் குறியில் உள்ளது.

(Visited 48 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி