இலங்கை

இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால குழு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை மீண்டும் ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், தொடர்ந்து மூன்றாவது தடவையாக குறித்த விசாரணை நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றில் மீள் பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

இந்த மனுவை ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்துள்ளார்.

நவம்பர் 16 அன்று, நீதிபதி நீல் இத்தவெல வழக்கிலிருந்து விலகியதையடுத்து, புதிய நீதிபதிகள் குழுவின் முன் தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!