இலங்கை செய்தி

எரிபொருள் விலை மீண்டும் உயரும் சாத்தியம்

 

அடுத்த வருடம் முதல் VAT வரியை 15% இல் இருந்து 18% ஆக அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் உட்பட பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்குமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

அங்கு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, எதிர்காலத்தில் மக்கள் வாழ முடியாது எனவும், அடுத்த வருடம் எரிபொருள் விலை 10% அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், டீசல் மற்றும் பெற்றோல் விலைகளுக்கும் VAT வரி விதிக்கப்பட்டால் டீசல் மற்றும் பெற்றோல் விலைகள் 420 ரூபாவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை