டன்கிர்க் துறைமுகத்தில் 10 டன் கோகைனை பறிமுதல் செய்த பிரெஞ்சு அதிகாரிகள்

டன்கிர்க் துறைமுகத்தில் பிரெஞ்சு அதிகாரிகள் 10 டன் கோகைனை பறிமுதல் செய்ததாக பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரான்சில் இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய கோகைன் இது என்று பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட மொத்த கோகைனில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காகும்.
போதைப்பொருட்கள் கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றின் சந்தை மதிப்பு சுமார் 339 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கப்பல் தென் அமெரிக்காவில் இருந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)