பின்லாந்தில் உறைபனியுடன் கூடிய வானிலை – விமானங்கள் இரத்து!
பின்லாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பனி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை விமான நிலையத்தில் வெப்பநிலை மைனஸ் 37 டிகிரி செல்சியஸாக (மைனஸ் 34.6 டிகிரி பாரன்ஹீட்) குறைந்ததாகவும், இதனால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை குறைவாக உள்ள பின்லாந்தின் கிட்டிலாவில் (Kittilä) ஆழ்ந்த உறைபனி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதிகளில் வெப்பநிலை -40 பாகை செல்சியஸாக பதிவாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்லாந்து மக்கள் பொதுவாக உறைபனி குளிர்கால வெப்பநிலைக்கு பழக்கப்பட்டவர்கள். ஆனால் இந்த ஆண்டு குளிர்காலநிலை மற்ற ஆண்டுகளை விட மிகவும் கடுமையானது எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





