உறைபனி நிலை – பிரான்ஸில் 05 பேர் உயிரிழப்பு!
ஐரோப்பாவின் சில பகுதிகளை இன்று உறைபனி தாக்கியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் பனியில் சிக்கி 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பிரான்சின் லேண்டஸ் (Landes) பகுதியில் 03 பேரும், பாரிஸைச் சுற்றியுள்ள இல்-டி-பிரான்ஸ் (Île-de-France) பகுதியில் குறைந்தது இரண்டு பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடுமையான பனிப்பொழிவால் பிரான்சின் வடக்கு மற்றும் மேற்கில் ஆறு விமான நிலையங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி
உறைபனி எச்சரிக்கை: பிரித்தானியாவில் இன்று 1,000 பாடசாலைகள் மூடல்!





