ஐரோப்பா

இங்கிலாந்தில் முதியவர்களை குறிவைத்து மோசடி- இந்திய இளைஞருக்கு 8ஆண்டுகள் சிறை!

இந்திய வம்சாவளியை சேர்ந்த கிஷன் பட் (28) என்பவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கிஷன் பட் அங்கு பலரிடம் பொலிஸ் அல்லது வங்கி அதிகாரி போல தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பழகி வந்துள்ளார்.

குறிப்பாக கிஷன் பட் முதியவர்களை தனது சதி வலையில் வீழ்த்தி வந்தார். அப்போது வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் தனது வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றி உள்ளார்.

Indian-origin fraudster sentenced to jail for targeting elderly victims in  UK - Mangalorean.com

அந்த வகையில் சுமார் ரூ.2¾ கோடி வரை மோசடியில் கிஷன் பட் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மோசடி அம்பலமானதை அடுத்து கிஷன் பட் கைதுசெய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு லண்டனில் உள்ள ஸ்னாரெஸ்புரூக் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிமன்றில் கிஷன் பட் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்