இலங்கை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் மோசடி: யாழில் ஒருவர் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் மோசடி செய்தவர் யாழ்ப்பாணத்தில கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட விசேட குற்றவிசாரணை பிரிவில் இத்தாலிக்கு செல்வதாக 23 லடசம் பணம் மோசடி செய்யப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் வசிக்கும் நபரொருவர் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ். மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழு பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபரை நெல்லியடி பொலிஸ் பிரிவில் தலைமறைவாக இருந்தபொழுது கைது செய்துள்ளனர்.

கைது செய்யபட்டவர் சுன்னாகம் உடபட யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் போலி விசாக்களை பயன்படுத்தி பத்துக்கு மேற்பட்டவர்களை ஏமாற்றியதுடன் 1 கோடிக்கு மேல் பணம் பெற்று விட்டு தலைமறைவாக இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் பொலிஸாரால் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

 

 

 

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!