ஐரோப்பா

பிரான்ஸின் உள்துறை அமைச்சர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

பாரிஸில் உள்ள ஜெப ஆலயத்தில் நபர் ஒருவரை தாக்கிய குற்றவாளிகளை பிரஞ்சு அதிகாரிகள் தேடி வருவதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் தெரிவித்துள்ளார்.

60களின் முற்பகுதியில் உள்ள ஒருவரைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை மாலை தாக்குதல் நடத்தப்பட்டது. இது பாரிஸில் நிகழ்ந்த புதிய ஆண்டிசெமிடிக் தாக்குதல்” என்று அழைக்கப்படுகிறது.

பாரிஸின் 20 ஆவது வட்டாரத்தில் 62 வயது முதியவர் ஒரு ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறும் போது, ஒரு தாக்குதல் நபர் ஒருவரை உடல் ரீதியாகவும், வாய்மொழியாகவும் தாக்கியதாக பாரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குற்றவாளி தப்பியோடியுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து யூத சமூகங்களின், குறிப்பாக பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி “உடனடியாகப் பாதுகாப்பை பலப்படுத்த” நாடு முழுவதும் உள்ள போலீஸ் ப்ரீஃபெக்சர்களுக்கு டார்மனின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!