இலங்கையில் மோசமான வானிலையால் நால்வர் பலி, 06 பேர் மாயம்!
இலங்கையின் மோசமான வானிலை காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த மோசமான காலநிலை காரணமாக தீவின் 18 மாவட்டங்களில் உள்ள 141 பிராந்திய செயலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
66,947 குடும்பங்களில் 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.





