இந்தியா

இந்தியாவில் வீடொன்றின் கழிவுநீர்த் தொட்டியில் இருந்து நான்கு உடல்கள் மீட்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம், சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர்த் தொட்டியில் இருந்து நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள இச்சம்பவத்துக்கு கொலைப் பின்னணி காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷிவ் குமார் வர்மா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், கழிவுநீர்த் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர்வாசி ஒருவர் பார்கவான் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததை அடுத்து, தொட்டியில் கிடந்த நான்கு உடல்களை காவலர்கள் மீட்டனர்.

இறந்தவர்களில் ஒருவர் அந்த வீட்டின் உரிமையாளர் ஹரி பிரசாத் பிரஜாபதியின் மகன் சுரேஷ் பிரஜாபதி (30), மற்றொருவர் கரண் ஹல்வாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மற்ற இரண்டு உடல்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

முதற்கட்ட விசாரணையின்படி, சுரேஷ் மற்றும் கரண் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் ஜனவரி 1ஆம் திகதி வீட்டிற்கு விருந்துக்கு வந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் இருவரையும் கொன்று கழிவுநீர்த் தொட்டியில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என்று காவல் கண்காணிப்பாளர் ஷிவ் குமார் கூறினார்.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!