இலங்கை

புதையல் தோண்ட முயற்சித்த நால்வர் கைது!

திருகோணமலை- உப்புவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் மற்றும் உபகரணங்களுடன் பயணித்த 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் பயணித்த காரையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (16) இடம்பெற்றுள்ளது

இவர்கள் அனுராதபுரம் மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் வசிக்கும் 23 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!