இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை – மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில்  வன்னியாராச்சி   இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வந்போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதனையடுத்து அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது  இருத் தரப்பினரதும் வாத பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதவான் அசங்க போதரகம,  அவரை  எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டுள்ளார்.

28 மில்லியன் ரூபாய்க்கு மேல் சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளியிட தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர்  கைது செய்யப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!