உலகம் செய்தி

எலும்புக்கூடுகள் மூலம் அடையாளம் காணப்பட்ட முன்னாள் ஓரிகான் மேயர்

வாஷிங்டனில்(Washington) உள்ள ஒரு கடற்கரையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட ஒரு மனிதனின் எலும்புக்கூடு எச்சங்கள், 2006ல் காணாமல் போன முன்னாள் ஓரிகான்(Oregon) மேயருக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளாரன்ஸ் எட்வின் “எட்” ஆஷர்(Clarence Edwin “Ed” Asher), ஓரிகான் கடற்கரையில் மீன்பிடி பயணத்தின் போது காணாமல் போன பிறகு சட்டப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டபோது அவருக்கு 72 வயது.

ஆஷர் காணாமல் போன ஒரு நாளுக்குப் பிறகு கடலோர காவல்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையில் வாஷிங்டன் கடற்கரையில் உள்ள குயினால்ட் இந்திய ரிசர்வேஷனில்(Quinault Indian Reservation) உள்ள கிராமமான தஹோலாவில்(Tahola) உள்ள ஒரு கடற்கரையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கிரேஸ் ஹார்பர்(Grays Harbor) கவுண்டி ஷெரிப் அலுவலகம் மற்றும் கொரோனர்(Coroner) அலுவலகம் எச்சங்களை அடையாளம் காண முயன்றன, ஆனால் எந்த தடயங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

எச்சங்கள் தேசிய காணாமல் போன மற்றும் அடையாளம் காணப்படாத நபர்கள் அமைப்பில் பதிவு செய்யப்பட்ட்டது.

2025ம் ஆண்டில், பிரேத பரிசோதனை அதிகாரியின் அலுவலகமும் கிங் கவுண்டி(King County) மருத்துவப் பரிசோதகரும் டெக்சாஸில்(Texas) உள்ள ஒரு ஆய்வகத்திற்கு எச்சங்களை அனுப்பினர், அங்கு விஞ்ஞானிகள் மரபணுக்களை பிரித்தெடுத்து அந்த நபருக்கான சுயவிவரத்தை உருவாக்க முடிந்தது.

இந்நிலையில், நிறுவனம் ஆஷரின் உறவினரின் மாதிரியைக் கொண்டு மனித எச்சங்களை மேயருடன் இணைக்க முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!