இலங்கை செய்தி

பொய் பரப்புரைகளுக்கு எதிராக முன்னாள் எம்பி சிறீதரன் சட்ட நடவடிக்கை! 

சமூகவலைத்தளங்களில் பாராளுமன்ற முன்னாள்உறுப்பினர் சிறீதரன் அவர்கள் மீது பரப்பப்படும் அவதூறு பிரசாரங்களுக்கு எதிராக பொலிசில் வழக்குத்தாக்கல் செய்திருக்கிறார்.

Facebook, TikTok போன்ற சமூகவலைத்தளங்களில் “Bar பொமிற் எடுத்தார் சிறீதரன்” போன்றவாறான பதிவுகள் மூலம் சிறீதரன் மீது அவதூறு பரப்பும் நோக்கோடு ஒரு தரப்பினால் தொடர்ச்சியாக கீழ்த்தரமான பொய் தகவல்களை பரப்பிவந்த நிலையில் குறித்த நபர்களுக்கு எதிராக கிளிநொச்சி பொலிசிலும், ஒட்டிசுட்டான் Cyber Crime பிரிவிலும் மற்றும் கொழும்பு Cyber Crime தலமையகத்திலும் குறித்த அவதூறு பரப்பிய நபர்களுக்கு எதிராக கடந்த 23.09.2024 ஆம் திகதி முறைப்பாடு செய்திருக்கிறார்.

பொலீசார் ஆரம்பித்த முதற்கட்ட விசாரணையில் ஒருவர் தாம் பதிவிட்ட செய்தி பொய்யானது என்பதை விசாரணையில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். மற்றும் ஒருவர் அதிக மதுபான பாவனையால் தனக்கு மனநிலை குழம்பிவிட்டத.

தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறேன் ஆதலால் தன்னை மன்னித்துவிடும்படி சிறீதரன் அவர்களிடம் தொலைபேசி அழைப்பெடுத்து கேட்டிருக்கிறார்.

ஆனால் குறித்த சட்ட நடவடிக்கை தொடர்பாக சிறீதரன் இறுக்கமான நிலைப்பட்டில் இருப்பதால் குறித்த விடயத்தை மறுத்திருக்கிறார்.

(Visited 28 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை