இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் பிணையில் விடுவிப்பு!வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று (09) முற்படுத்தப்பட்டவேளை 20 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் ஒன்று வெலிவேரியா பகுதியில் பாழடைந்த இடமொன்றில் இருந்து மீட்கப்பட்டது.

பாதாள குழு உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமையவே துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது.

எனவே, குறித்த துப்பாக்கி எவ்வாறு பாதாளகுழு வசம் சென்றது என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவினர், விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

டக்ளஸ் தேவானந்த தரப்பில் உரிய பதில் வழங்கப்படாததால் அவர் கைது செய்யப்பட்டார். இரு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவுக்கும், அவருக்கு பிணை வழங்கிய இருவருக்கும் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அடுத்தகட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!