ஐரோப்பா

ஜெர்மனியில் சாரதி அனுமதி பத்திரம் பெற முடியாமல் கடும் நெருக்கடியில் வெளிநாட்டவர்கள்

ஜெர்மனியில் வெளிநாட்டவர்கள் சாரதி அனுமதி பத்திரம் பெற முடியாமல் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கு எழுத்து மூலமான பரீட்சையில் தோற்றுகின்றவர்களில் அநேகமானவர்கள் தோல்வி அடைவதாக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதற்கான எழுத்து மூலமான பரீட்சைகளில் பங்கு பற்றுகின்றவர்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த பரீட்சையில் தேர்வது குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது 2010 ஆம் ஆண்டு எழுத்து மூலமான பரீட்சையில் தேர்வு பெறாதவர்களின் சதவீதம் 37 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 2023 ஆம் ஆண்டு எழுத்து மூலமான சாரதி அனுமதி பத்திர பரீட்சையில் தேர்ச்சி அடையாதவர்களின் சதவீதமானது 45 ஆக காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சாரதி அனுமதி பத்திரத்தின் எழுத்து மூலமான பரீட்சையில் தேர்ச்சி பெறாமைக்கு முக்கிய காரணமான பல வெளிநாட்டவர்கள் இந்த நாட்டினுடைய ஜெர்மன் மொழியில் சிறந்து காணப்படாததால் எழுத்து மூலமான பரீட்சைக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளதாக கருதப்படுகின்றது.

மேலும் எழுத்து மூலமான பரீட்சைக்கு மேலதிகமான கேள்வி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் போக்குவரத்தில் கடுமையான சில விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாலும், எழுத்து மூலமான வாகன சாரதி அனுமதி பத்திரத்தின் பரீட்சையில் தேர்ச்சியடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

(Visited 39 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!