இலங்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டு பெண்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணொருவர் கைதாகியுள்ளார்.

18 கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 22 கிலோகிராம் குஷ் மற்றும் ஹஷீஸ் ரக போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவர் நேற்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இலங்கையில் அழகுக்கலை நிலையமொன்றை நடத்தி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்