ஜெர்மனியில் பாடசாலை மாணவர்களை தாக்கும் வைரஸ் – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

ஜெர்மனியில் பாடசாலை மாணவர்களில் 6 பேரில் ஒருவர் கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் காய்ச்சலுடன் போராடி வருவதாகவும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜெர்மனியில் உள்ள பாடசாலைகளில் காய்ச்சல், சளி, கொவிட்19 மற்றும் பிற சுவாச வைரஸ்களின் அலை பரவி வருகிறது.
ஐந்து முதல் 14 வயது வரையிலான ஆறு மாணவர்களில் ஒருவருக்கு கடுமையான சுவாச நோய் உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கடுமையான தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று ஜெர்மனியின் நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு மையமான ரொபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரொபர்ட் கோச் நிறுவனத்தின் அறிக்கைக்கமைய, ஜனவரி 27ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரையிலான வாரத்தில் இந்த வயதிற்குட்பட்ட ஒவ்வொரு 100,000 சிறுவர்களில் சுமார் 17,180 பேருக்கு கடுமையான சுவாச நோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒரு வருடத்திற்கு முன்பு 100,000 சிறுவர்களில் 13,810 பேர் நோய்வாய்ப்பட்டிருந்த அதே காலகட்டத்தில், அதாவது 7 மாணவர்களில் ஒருவருக்கு இருந்ததை விட கணிசமாக அதிகமாகும்.