ஐரோப்பா

ஐரோப்பாவை அச்சுறுத்தும் வெள்ளப்பெருக்கு – 4 பேர் மரணம்

வெள்ளப்பெருக்கு காரணமாக ருமேனியாவில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

நேற்றைய தினம் முதல் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று செக் குடியரசு முழுவதும் 38 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

தலைநகரமான ப்ராக் நகரிலும் வெள்ளத் தடுப்புகள் நிறுவப்பட்டுள்ளன, மேலும் மிருகக்காட்சிசாலையும் மூடப்பட்டுள்ளது.

போலாந்திலும் நதிகளின் ஆபத்தான நிலை அதிகரித்துள்ளதால் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளம் காரணமாக ருமேனியாவின் பல பகுதிகளில் ஏராளமான மக்கள் வீடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிடுகின்றன.

(Visited 29 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்