ஐரோப்பா

லண்டனில் இருந்து சென்ற விமானத்தில் விபரீதம் – பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் உயிரிழந்த நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

73 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

விமானத்தின் உள்ளே ஏற்பட்ட இந்த குலுங்கிய சூழ்நிலையால் மேலும் 71 பயணிகள் காயமடைந்தனர்.

மலேசியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் அயர்லாந்து குடிமக்கள் காயமடைந்துள்ளனர்.

7 பயணிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலை ஏற்பட்ட போது விமானத்தில் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலைமையின் பின்னர், இந்த போயிங் விமானம் பாங்கொக்கிற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கு அனுமதி கோரியதாகவும், தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

211 பயணிகளில் 131 பேர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான மற்றொரு விமானம் மூலம் அவர்களது இலக்குக்கு மாற்றப்பட்டனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content