ஐரோப்பா செய்தி

லண்டன் நோக்கி வந்த விமானத்தில் விமானப் பணி பெண் மீது கொடூர தாக்குதல்

லண்டன் – பயணி ஒருவர் விமானத்தின் கழிவறையை சேதப்படுத்திவிட்டு விமானப் பணிப்பெண்ணின் முகத்தை அடித்து நொறுக்கினார்.

பாங்காக்கில் இருந்து ஹீத்ரோவுக்கு சென்ற தாய் ஏர்வேஸ் விமானத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 35 வயதான அந்த நபர் விமானப் பணிப்பெண்ணை அடித்து தரையில் தள்ளினார்.

அதிர்ச்சியடைந்த மற்றைய பயணி தாக்கியவரைத் தடுக்க முயன்றும் அவரை அடக்க முடியவில்லை. இந்த காட்சியை சில இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவர் மொபைல் கேமராவில் படம் பிடித்துள்ளார்.

விமானப் பணிப்பெண்ணின் மூக்கை உடைத்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். வன்முறை தொடர்ந்தால் விமானம் துபாய்க்கு திருப்பி விடப்படும் என குழுவினர் எச்சரித்துள்ளனர்.

இரண்டு பயணிகள் தாக்கியவரின் கைகளைக் கட்டியபோது அவர் அமைதியடைந்தார்.

அப்போது அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார். லண்டனில் தரையிறங்கிய அவர் பின்னர் கைது செய்யப்பட்டார். காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!