இலங்கை

வவுனியாவை சேர்ந்த ஐவர் தமிழ்நாட்டில் தஞ்சம்!

பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தமிழ்நாட்டின் தனுஸ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல் நாட்டில் இருந்து நூற்றுக்கணக்கான இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இந்நிலையில் வவுனியா மாவட்டம் நெடுங்குழி பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ரந்த மொத்தமாக 5 பேர் நேற்று மாலை மன்னாரில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

இந்த பயணத்தை மேற்கொள்வதற்காக படகொன்றுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ராமேஸ்வரம் மரைன் பொலீசார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ள தமிழக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content