ஐரோப்பா

சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் சொகுசு ரிசார்ட்டுக்கு அருகில் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் உயிழப்பு

சுவிட்சர்லாந்துநாட்டில் உள்ள செர்மட் நகரில் ஏறத்தாழ 7 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள பனிமலையும் அமைந்துள்ளது. ஆண்டின் அனைத்து நாட்களில் பனிபொழியும் அந்த நகரில் பனிசறுக்கு விளையாட, மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு குவிகிறார்கள். இதனால் அங்கு உயர்தரத்திலான நட்சத்திரவிடுதிகள், சிறுவர் பூங்காக்கள், ரோப்கார் சேவைகள்அமைக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள 4 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள ரீம்ப்பிஷ்ஹார்ன் பனிசிகரத்தில் பனிசறுக்கு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் உள்ளூர்காரர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து கலந்து கொண்டனர். பனிசறுக்கு போட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு சூரைக்காற்று வீசியது.

அதனை தொடர்ந்து அங்கு பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனி குவியல்கள் ராட்சத பந்துபோல உருண்டோடி அங்கு பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.இந்த கொடூர சம்பவத்தில் வெளிநாட்டினர் உள்பட 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த ராணுவ வீரர்கள் அங்கு வந்து பனிசரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!