தெற்கு கடற்பரப்பில் அதிரடியாக ஐவர் கைது
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் மீன்பிடி படகொன்றில் கடத்தப்பட்ட பெருமளவான போதைப்பொருட்களுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தெற்கு கடற்பரப்பில் ஆழ்கடல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக் கப்பல் ஒன்றினால் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கப்பல் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





