வட அமெரிக்கா

விலங்குகள் தொடர்பின்றி அமெரிக்காவில் முதல் பறவைக் காய்ச்சல் பாதிப்பு

விலங்குகள் தொடர்பின்றி அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பாதிப்பு அமெரிக்காவில் ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று அந்நாட்டு அதிகாரிகள் செப்டம்பர் 6ஆம் திகதியன்று தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் அவர் ஆகஸ்ட் 22ஆம் திகதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அமெரிக்க நோய் தடுப்பு, கட்டுப்பாடு மையம் கூறியது.அவருக்கு இன்ஃபுளுவென்சா காய்ச்சல் ஏற்பட்டதாக அறியப்படுகிறது.

சிகிச்சை பெற்றதும் குணமடைந்து அவர் வீடு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் சந்தேகப்படும்படி இருந்ததால் கூடுதல் பரிசோதனைக்காக அவரது ரத்த மாதிரி மாநில, கூட்டரசு ஆராய்ச்சிக்கூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அவருக்கு எச்5 கிருமி, அதாவது பறவைக் காய்ச்சல் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது.அவர் 2024ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14வது நபர்.ஆனால் விலங்குகள் தொடர்பின்றி அந்நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர்.

“மிசோரியில் உள்ள கால்நடைப் பண்ணைகளில் எச் 5 கிருமித்தொற்று பாதிப்பு இல்லை. சில பறவைகளுக்கு மட்டும் அந்தப் பாதிப்பு இருந்ததாகத் தெரியவந்துள்ளது,” என்று மிசோரி சுகாதாரத்துறை தெரிவித்தது.

(Visited 43 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்