“முதலில் ஜனாதிபதி பதவி விலகட்டும்” – நாமல் சர்ச்சை கருத்து
“ முதலில் ஜனாதிபதியை பதவி விலகச் சொல்லுங்கள், பிறகு ஆட்சியை பொறுப்பேற்பது பற்றி கதைக்கலாம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa எம்.பி. தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்றிரவு விசேட ஆன்மீக வழிபாடு இடம்பெற்றது. இந்நிகழ்வின் பின்னர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.
இதன்போது அவரிடம் “ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவி விலகினால் நாட்டை பொறுப்பேற்க நாமல் ராஜபக்ச தயார்.” எனக் கூறப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு சிரித்தப்படியே நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.
“முதலில் பதவி விலகச் சொல்லுங்கள்..” – என்றார்.
அவ்வாறு விலகினால் பதவி ஏற்க தயாரா என நாமலிடம் மீண்டும் கௌ;வி எழுப்பட்டது.
“முதலில் பதவி விலகச் சொல்லுங்கள்….” என மீண்டும் பதிலளித்தார்.
ஜனாதிபதிக்கு முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டும். கல்விக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு சம்பந்தமாகவே அவர் விலக வேண்டும். பிறகு ஜனாதிபதி தொடர்பில் பார்த்துக்கொள்வோம்.
அதிகாரிகள்மீது பொறுப்பை சுமத்தி சரிவராது, பிரதமரே பொறுப்பு கூறவேண்டும்.” – என்றார் நாமல்.





