இலங்கை செய்தி

தேங்காய் திருடச் சென்றவர் மீது துப்பாக்கிச் சூடு

கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான தோட்டமொன்றில் தேங்காய் திருட சென்ற நபர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தோட்டத்தின் காவலாளியே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (01) மாலை 5.20 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. யக்வில – ஹகவா பகுதியைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

தேங்காய் திருட சென்ற போது தோட்ட காவலாளி துப்பாக்கியால் சுட்டதாக காயமடைந்த நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதில் இடது கை மற்றும் இடுப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை