உலகம் செய்தி

மெக்சிகோவில் (Mexico) தீ விபத்து – குழந்தைகள் உள்பட 23 பேர் பலி!

மெக்சிகோவில் (Mexico)கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோனோரா (Sonora)  மாநிலத்தின் தலைநகரான ஹெர்மோசில்லோ (Hermosillo) நகர மையத்தில் நேற்று இந்த தீ விபத்து ஏற்பட்டது.

காயமடைந்தவர்கள் ஹெர்மோசில்லோவில் (Hermosillo) உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளில் “நச்சு வாயுக்களை உள்ளிழுத்ததால்”  இறப்புகள் ஏற்பட்டதாக  ஆளுனர் சலாஸ் சாவேஸ் (Salas Chávez) கூறியுள்ளார்.

தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

(Visited 5 times, 6 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!