உலகம் செய்தி

ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகள் ஊடாக உக்ரைன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி.

ரஷ்யாவின் முழு அளவிலான போருக்குப் பின்னர், சுமார் நான்கு ஆண்டுகளாக உக்ரைன் தனது இராணுவத்தையும் பொருளாதாரத்தையும்
நடத்தி செல்வதில் நிதி சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், இரண்டு ஆண்டுகளுக்குள் உக்ரைனுக்கு €135.7 பில்லியன் நிதி இடைவெளியை நிரப்ப முடக்கப்பட்ட
ரஷ்ய சொத்துகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

பெல்ஜிய வங்கியான Euroclear இல் மட்டும் ரஷ்யாவின் €185 பில்லியன் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

ரஷ்யா, EU வின் திட்டத்தை கொள்ளைச் செயல்கள் என எச்சரிப்பதுடன் Euroclear மீது மாஸ்கோ நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

ரஷ்யா அழித்ததை மீண்டும் கட்டியெழுப்ப இந்த சொத்துகளை பயன்படுத்துவது நியாயமானது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, கூறியுள்ளார்.

இந்த பணம் உக்ரைனுக்கு எதிர்கால ரஷ்ய தாக்குதல்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் என ஜெர்மனும் தெரிவித்துள்ளது.

மேலும் ஐரோப்பிய ஒன்றியம், இந்த சொத்துகளை “இழப்பீட்டுக் கடன்” என கூறுகிறது.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!