இலங்கை – இந்தியாவிற்கான படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் மற்றும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இன்று (14) முதல் 18 ஆம் தேதி வரை பயணிகள் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த கடல் பகுதிகளில் நிலவும் பாதகமான வானிலையைக் கருத்தில் கொண்டு இந்த பயணிகள் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.





