உலகம் செய்தி

இந்திய கிரிக்கெட் வீரருக்கு எதிராக இனவெறி சொல்லை பயன்படுத்திய பெண் வர்ணனையாளர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் பும்ராவின் பந்துவீச்சு மட்டும்தான் சிறப்பாக செயல்பட்டது.

இந்த சூழலில் பும்ரா ஐந்து விக்கெட் எடுத்த போது முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையும் பெண் வர்ணனையாளருமான ஈஷா குகா இனவெறி சொல் ஒன்றை பயன்படுத்தியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஷா குகா, பும்ராவை Most valuable player என்று தெரிவித்தார். அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என பேசிய இசா குஹா, most valuable Primate என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.

இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரைமட் என்றால் குரங்கு இனத்தை சேர்ந்த ஒரு உயிரினத்தை குறிக்கும். இதனால் இஷா குகா பும்ராவை இன வெறியுடன் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து இன்றைய ஆட்டம் ஆரம்பமாகும் போது வர்ணனையாளர் ஈஷா குகா சம்பவத்திற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!