ஆசியா செய்தி

சிங்கப்பூரில் நாளை முதல் அதிகரிக்கும் கட்டணம்!

சிங்கப்பூரில் நாளை முதல் பேருந்து, ரயில் சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியவர்கள் கூடுதலாக 10 காசு செலுத்தவேண்டும். சலுகைக் கட்டண அட்டை வைத்திருக்கும் மாணவர்கள், மூத்தோர், உடற்குறையுள்ளோர் ஆகியோர் கூடுதலாக 4 காசு செலுத்தவேண்டும்.

கட்டணம் 6 விழுக்காடு உயர்த்தப்படுமென பொதுப் போக்குவரத்து மன்றம் செப்டம்பரில் சொன்னது.

கடந்த ஆண்டு சிங்கப்பூர் மக்களின் சம்பள அதிகரிப்பு, அடிப்படைப் பணவீக்கம் ஆகிவற்றின் அடிப்படையில் கட்டணம் ஏற்றப்படுவதாக அது கூறியது.

இந்நிலையில் கட்டண உயர்வைச் சமாளிக்கக் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்குப் பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

ஒவ்வொரு பற்றுச்சீட்டும் 60 வெள்ளி மதிப்புடையது என்று மன்றம் குறிப்பிடப்படுகின்றது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!