இந்தியாவில் அச்சுறுத்தும் கொரோனா தொற்று – ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

இந்தியாவில் 1,000 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் மீண்டும் ஒரு புதிய கோவிட் வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் இந்தியாவில் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய, இந்தியாவில் இதுவரை 1,009 செயலில் உள்ள கோவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியில் இருந்து 109 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 99 பேர் கடந்த வாரத்தில் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பதிவான கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.
(Visited 6 times, 1 visits today)