ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் தந்தைக்கு மகன் செய்த கொடூரம் – விருந்தின் பின் நடந்த விபரீதம்

பிரான்ஸில் ஒன்பது தடவைகள் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எசோன் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 44 வயதுடைய ஒருவர் சரமாரியாக கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

விருந்து ஒன்றில் கலந்துகொண்ட அவரது மகன், நிறைந்த மது போதையில் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.

மகன் மதுபோதையில் இருந்ததன் காரணமாக தந்தைக்கு கடும் கோபம் வர, தந்தைக்கும் -மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் முடிவில் மகன் சமையலறையில் உள்ள கத்தி ஒன்றை எடுத்து, தந்தையைக் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த தந்தை, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவர் உயிராபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது தடவைகள் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும், அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 9 visits today)
See also  காசா, லெபனான் போர் நிறுத்தம் கோரி உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பேரணி
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content