காசா உதவி விநியோகத்தின் போது ஆறு குழந்தைகளின் தந்தை மரணம்

தெற்கு காசாவில் ஆறு குழந்தைகளுக்குத் தந்தையான ஹோசம் வாஃபி தனது குடும்பத்திற்கு உணவளிக்க பொருட்களைப் பெற முயன்றபோது உயிரிழந்துள்ளார்.
முந்தைய நாள் உணவு விநியோக இடத்தை அடைய முயன்றபோது இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 31 பேரில் ஹோசம் வாஃபியும் ஒருவர்.
“அவர் தனது மகள்களுக்கு உணவு எடுக்கச் சென்றார். இறந்து திரும்பி வந்தார்,” என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஹொசம் வாஃபி தனது சகோதரர் மற்றும் மருமகனுடன் தெற்கு நகரமான ரஃபாவில் புதிதாக நிறுவப்பட்ட விநியோக மையத்திற்கு பயணம் செய்திருந்தார்.
“அவர்கள் மாவு வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ட்ரோன் அவர்கள் மீது விழுந்தது,” என்று அவரது தாயார் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் முற்றத்தில் தனது நான்கு பேத்திகளை ஆறுதல்படுத்த முயன்றபோது தெரிவித்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக இஸ்ரேல் அதிகரித்து வரும் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது, அங்கு ஐக்கிய நாடுகள் சபை முழு மக்களும் பஞ்ச அபாயத்தை எதிர்கொள்கிறது என்று எச்சரித்துள்ளது.