இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் ஆடையை அழுக்காக்கிய 6 வயது சிறுமியை கொன்ற தந்தை மற்றும் மாற்றாந்தாய்

உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநிலம் காஜியாபாத்தில்(Ghaziabad) ஆறு வயது சிறுமி விளையாடும் போது உடைகள் அழுக்காகிவிட்டதால் அவரது தந்தை மற்றும் மாற்றாந்தாயால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

வேவ் சிட்டி(Wave City) காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட தஸ்னா(Dasna) நகரின் பாஜிகரன் மொஹல்லாவில்(Bajikaran Mohalla) இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை விளையாடும்போது தற்செயலாக வடிகாலில் விழுந்ததால், அவரது ஆடைகள் அழுக்காகிவிட்டன. இதனால் ஆத்திரமடைந்த தந்தை மற்றும் மாற்றாந்தாய் குழந்தையை கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் குழந்தை வீட்டில் தனியறையில் தனியாக விடப்பட்டது, அங்கு அவள் காயங்கள் மற்றும் குளிரில் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் 13 காயங்கள் இருப்பதும் அதில் விலா எலும்புகள் உடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!