இலங்கை

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை!

கரடிஎல்ல பகுதியில் இன்று (11) காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

நுவரெலியா-கம்போல பிரதான சாலையில், ரம்பொடவின் கரடியெல்ல  பகுதியில் இன்று (11.05) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது பதினைந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்து கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகலுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!