எகிப்தில் 20 வருட புனரமைப்பிற்கு பிறகு பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட பிரபல கல்லறை
எகிப்தின் தெற்கு நகரமான லக்சரில் 20 வருட புனரமைப்பிற்கு பிறகு பண்டைய எகிப்து மன்னர் பார்வோனின் கல்லறை பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கிமு 1390 முதல் கிமு 1350 வரை பண்டைய எகிப்தை ஆண்ட மூன்றாம் அமென்ஹோடெப்பின் பிரமாண்டமான கல்லறை, தெற்கு எகிப்திய நகரமான லக்சருக்கு அருகில் நைல் நதியின் மேற்குக் கரையில் உள்ள மலைப்பகுதியில் உள்ளது.
இது கடந்த 20 வருடங்களாக ஜப்பானிய தலைமையிலான மூன்று கட்ட மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இருந்தது.
இந்தக் கல்லறை 118 அடி நீளம் மற்றும் 45 அடி ஆழம் கொண்டது. இதில் மன்னருக்கான ஒரு முக்கிய அடக்க அறையும், அவரது மனைவிகளான தியே மற்றும் சிதாமுன் ஆகியோருக்கான இரண்டு அறைகளும் அடங்கும்.
மேலும் அடக்க அறையில் இறந்தவர்களின் புத்தகத்திலிருந்து காட்சிகளின் கல்வெட்டுகள் உள்ளன, இது பண்டைய எகிப்தில் பாதாள உலகத்தின் வழியாக இறந்தவர்களை வழிநடத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மந்திரங்களின் தொகுப்பாகும்.





