இலங்கை செய்தி

இளைஞர்களிடம் பெரும்தொகை பணத்தை ஏமாற்றிய பிரபல அரசியல்வாதி

இளைஞர்கள் குழுவொன்றுக்கு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு வழங்குவதாக கூறி 20 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பத்தேகம தொகுதி அமைப்பாளர் மலிக் குணவர்தனவை கைது செய்வதற்கான விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காலி, ரத்கம, புஸ்ஸ, யக்கலமுல்ல மற்றும் அங்குலகஹா பிரதேசங்களில் இளைஞர்கள் குழுவொன்று இந்த மோசடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபருக்கு எதிரான குற்றவியல் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையை காலி நீதவானிடம் காலி பொலிஸார் சமர்ப்பித்துள்ளனர்.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரஜீந்திர நாரங்கொட, இன்று (15) நீதிமன்றில் எதிர்பார்த்த பிணையை கோரினார்.

பிணை கோரிக்கைக்கு எதிராக எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கை ஒத்திவைத்தார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)
See also  இலங்கை: உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்!
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content