இலங்கையில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு சம்பவம்
இன்று பிற்பகல் நீர்கொழும்பு பகுதியில் கடை உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று பிற்பகல் நீர்கொழும்பு காமச்சோடி சந்தையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் கடையின் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளனர்.
இருப்பினும், ஆயுதம் செயலிழந்ததால், துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்ததால், சந்தேக நபர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.





