இலங்கை செய்தி

மலையகத்திலும் ரயில் பயணச்சீட்டு கட்டணத்தை மீளப் பெறும் வசதி

கொழும்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளிலும் பயணச்சீட்டு கட்டணத்தை மீளப் பெறும் வசதி விரிவுப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் இலங்கை ரயில்வே இதனை அமுல்படுத்தும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பல தசாப்தங்களாக கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் மட்டுமே பயணச்சீட்டு கட்டணத்தை மீளப் பெறும் வசதி வசதி காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பதுளை, எல்ல, பண்டாரவளை, ஹப்புத்தளை, நானுஓயா மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களில் இந்த வசதி கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வசதி ஒரு முன்னோடித் திட்டமாக அநுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ராய்வே நிலையங்களிலும் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் கண்டி ரயில் நிலையம் இந்தப் பட்டியலில் சேரும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!