இலங்கையில் பேஸ்புக் விருந்து சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 76 பேர் கைது

பேஸ்புக் விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு 76 சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீதுவ, பெல்லனாவத்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி பேஸ்புக் விருந்து நடத்தப்படுவதாக சீதுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களும் பெண்களும் ஐஸ் மற்றும் கஞ்சா உட்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
14 ஆண்கள் உட்பட மூன்று சந்தேக நபர்கள் நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஐஸ், கேரள கஞ்சா மற்றும் சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த விருந்தில் பங்கேற்ற 12 இளம் பெண்கள் மற்றும் 47 இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.