ஐரோப்பா

ஸ்பெயினை அச்சுறுத்தும் கடும் வெப்பம் – மரணங்கள் ஏற்படும் அபாயம் – அதிகாரிகள் எச்சரிக்கை

ஸ்பெயினில் வீசும் அனல்காற்றால் சில பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸைக் கடந்துள்ளமையினால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

தென் பகுதியில் வெப்பநிலை 44 பாகை செல்சியஸை எட்டியுள்ளது. தலைநகர் மட்ரிடில் (Madrid) அது 40 பாகை செல்சியஸைத் தாண்டியது.

அதிகரிக்கும் வெப்பத்தால் மரணங்கள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு அதிக வெப்பத்தாலும் உடலில் நீர்ச்சத்துக் குறைந்ததாலும் 350க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

2021ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அது ஏறக்குறைய 90 விழுக்காடு அதிகம் என்று அரசாங்கப் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.

அண்மை ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் வெப்பம் படிப்படியாக உயர்ந்துவருகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!