ஐரோப்பா

ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுப்பிடிப்பு!

ஜேர்மனியின் Dusseldorf நகரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டொன்று இனங்காணப்பட்டுள்ளது.

நகரத்தின் மிருக காட்சிசாலைக்கு அருகில் குறித்த வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்காரணமாக குறித்த பகுதியில் இருந்து சுமார் 13000 மக்களை வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் குண்டு இனங்காணப்பட்ட 500 மீற்றர் சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியூடான போக்குவரத்தும் தற்காலிக்கமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை கடந்த 2017 ஆம் ஆண்டில், பிராங்பேர்ட்டில் 1.4 டன் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய விமானப்படைகள் ஐரோப்பாவில் 2.7 மில்லியன் டன் குண்டுகளை வீசியுள்ளன என நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content